ராசிபலன் இன்று 4 மே 2022: இன்று சில ராசிக்காரர்களுக்கு சவாலான நாளாக இருக்கும். புதன்கிழமை, சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் சக ஊழியர் அல்லது பணியாளரிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும், தேவையற்ற வாக்குவாதங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும். மறுபுறம், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமும் ஊழியர்களிடமும் கோபப்பட நேரிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் உடனிருப்பவர்களை சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் மனதில் உண்டாகும். சுரங்கம் தொடர்பான செயல்பாடுகளில் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தேவையில்லாமல் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியுடன் செயல்படுவது நல்லது.


மிதுனம்: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் பற்றிய கவலைகள் நீங்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பதில் திறமைகள் வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் புதுவிதமான ஆலோசனைகள் கிடைக்கும்.


கடகம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.
 
சிம்மம்: கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பீர்கள். மனம் மகிழும் படியான செய்திகள் மற்றும் சூழ்நிலைகள் அமையும்.
 
கன்னி: உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு மற்றும் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் பாசன வசதிகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.


துலாம்: கிடைக்கும் சிறு வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். இளைய உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும் நற்பெயர் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.


விருச்சகம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சமயோகித பேச்சுக்களின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். தனவரவுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய செயல்களை செய்யும் பொழுது சிந்தித்து முடிவுகளை எடுப்பது நன்மையை அளிக்கும்.


தனுசு: பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல்படுத்த சில தடைகளை தாண்டி செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் நீங்கி சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.


மகரம்: தொலைதூர தகவல்கள் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த தொழில் சார்ந்த தடைகள் குறையும். தேவையற்ற பேச்சுக்கள் பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். 


கும்பம்: தெளிவான சிந்தனையுடனும், தீர்க்கமான முடிவுடனும் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகளும், ஆலோசனைகளும் கிடைக்கும்.


மீனம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் மதிப்புகளும், வாய்ப்புகளும் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் உண்டாகும்.


 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR