sperm donation News Tamil : டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் அண்மையில் வெளியிட்ட சோஷியல் மீடியா பதிவில் தான் 100 குழந்தைகளுக்கு தந்தையாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தனை குழந்தைகளுக்கு தந்தையானதை சமீபத்தில் தெரிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கு இப்போது தான் 39 வயதாகிறது. இந்த இளம் வயதில் 100 குழந்தைகளுக்கு அப்பாவானது எப்படி? என பலரும் கேட்கின்றனர். அதற்கு பாவெல் துரோவ் கொடுத்திருக்கும் விளக்கத்தில் விந்தணு தானம் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செய்து வருவதாக கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாவெல் துரோவ் மேலும் கொடுத்துள்ள விளக்கத்தில், தன்னிடம் விந்தணு தானம் கேட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் கேட்டதாகவும், அப்போது கிளினிக்கிற்கு சென்றபோது விந்தணுக்கள் உயர் தரத்தில் இருப்பதும் தெரியவந்ததாக கூறியுள்ளார். அப்போது, விந்தணு தானம் செய்யுமாறு கிளினிக்கில் இருந்தவர்கள் கேட்டுக் கொண்டதால், அப்போது இருந்து இந்த தானம் செய்து வருவதாகவும் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். விந்தணு தானம் செய்வதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. 


மேலும் படிக்க | துன்பம் வரும்போதெல்லாம் மகிழ்ச்சியோடு எதிர்கொள்வது எப்படி?


தம்பதிகள் கருவுறாமை இருந்தால் விந்தணு தானம் மூலம் பெற்றோராகலாம். 1884 முதல், அமெரிக்காவில் விந்தணு தானம் மூலம் குழந்தைகள் பிறக்கிறார்கள். தம்பதிகள் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்தால் அவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது, விந்தணு தரம் குறைவாக இருந்து மலட்டுதன்மை உறுதி செய்யப்பட்டால், அந்த தம்பதியால் கருதரிக்க முடியாது என மருத்துவர்கள் கூறுவார்கள். அந்தநேரத்தில் விந்தணு தானம் பெற்று தங்களின் குழந்தை ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 


விந்தணு தானம் செய்ய இருக்கும் பரிசோதனைகள்


விந்தணு தானம் செய்பவர் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கடுமையான நோய் அல்லது தொற்று நோயால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பெரும்பாலான விந்தணு வங்கிகள் 18 முதல் 40 வயது வரையிலான ஆண்களிடமிருந்து மட்டுமே விந்தணு தானத்தை ஏற்றுக்கொள்கின்றன. இதில் விந்தணுக்களின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அளவு ஆகியவை சாதாரணமாக இருப்பது உறுதி செய்யப்படும். விந்தணு தானம் செய்பவர்களுக்கு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். குடும்பத்தில் மரபணு சார்ந்த தீவிர நோய்களும் இருக்கக்கூடாது. 


விந்து தானம் செய்ய வழிமுறை


நன்கொடையாளர் அங்கீகரிக்கப்பட்ட விந்தணு வங்கியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு, நன்கொடையாளரின் மருத்துவ மற்றும் உளவியல் சோதனை செய்யப்படும். இதில் உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை, தொற்று பரிசோதனை, மரபணு சோதனை ஆகியவை அடங்கும். நன்கொடையாளரின் சோதனைகள் இயல்பானதாக இருந்தால், அவரிடமிருந்து விந்தணு மாதிரி எடுக்கப்படுகிறது. விந்தணுவின் தரத்தை மதிப்பிட ஆய்வகத்தில் மாதிரி சோதனை செய்யப்படுகிறது. விந்தணு நன்கொடையாளரின் உடல் பண்புகள், கல்வி, தொழில் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் ரகசிய புரொபைலில் பதிவு செய்யப்படும். இதனையடுத்து விந்தணு பரிசோதனை மையத்தில் உறைய வைக்கப்படும்.


விந்து தானம் குறித்த கட்டுக்கதை


விந்தணு தானம் செய்பவர்கள் குழந்தையை பார்க்க உரிமை உண்டு என்ற தகவல் இருக்கும் நிலையில், அது உண்மையில்லை. விந்தணு தானம் செய்தவர் குழந்தையை சந்திக்கவோ அவர்களைப் பற்றிய தகவல் பெறவோ உரிமை இல்லை. 


மேலும் படிக்க | Fake Friend-ஐ கண்டுபிடிப்பது எப்படி? மனம் நோகாத சிம்பிள் வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r