பன்னீர் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் எல்லாவற்றிலுமே கலப்படம் காணப்படுகின்றது. அது உணவுப் பொருட்களாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி. இனிப்புகள், நெய், பால், பாலாடைக்கட்டி, கோயா என சந்தையில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகிறோம், ஆனால் அவற்றில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலப்பட பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். பன்னீர் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள். புரத சத்து நிறைந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது  என்பதில் மாற்று கருத்து இல்லை. பல வகையான உணவுகள் பன்னீர் என்னும் பாலாடைக்கட்டியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, குறிப்பாக, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆக மிக விரும்பி சாப்பிடப்படுகிறது. 


ஆனால் நீங்கள் சாப்பிடும் பன்னீர் கலப்படம் இல்லாததா  என்பதை கண்டறியும் முறையை பற்றி அறிந்து கொள்ளலாம். நீங்கள் உண்மையான மற்றும் போலி பாலாடைக்கட்டிகளை அடையாளம் காண விரும்பினால், இந்த முறைகளை முயற்சிக்கவும்.


சுத்தமான பன்னீர் அல்லது கலப்பட்ட பன்னீரை எவ்வாறு அடையாளம் காண்பது


1. முதல் முறை


சுத்தமான பன்னீரை அடையாளம் காண்பதற்கான முதல் வழி அதை நசுக்கி பார்ப்பது. பன்னீர் உடைந்து பிரிய ஆரம்பித்தால், பனீர் கலப்பட்டம் இல்லாதது என்பதை புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் அதில் இருக்கும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் அதிக அழுத்தத்தை தாங்காது.


மேலும் படிக்க | பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை ஒருபோதும் சமைக்க வேண்டாம்!


2. இரண்டாவது முறை


உண்மையான பன்னீர் மென்மையானது. ஆனால் உங்கள் பனீர் இறுக்கமாக இருந்தால் அது கலப்பட பனீர் ஆகும். இறுக்கமான பன்னீரை சாப்பிடும் போது ரப்பர் போல உணரலாம்.


3. மூன்றாவது முறை


பனீரை தண்ணீரில் வேகவைத்து, பனீர் ஆறியதும், அதனுடன் துவரம் பருப்பு பொடி  அல்லது சோயாபீன் பொடி சேர்த்து முயற்சிக்கவும். பன்னீர் கருப்பாக மாறினால் அந்த சீஸ் போலியானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


4. நான்காவது முறை


முதலில் பன்னீரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைக்கவும். இப்போது அதில் சில துளிகள் அயோடின் டிஞ்சர் சேர்க்கவும். உங்கள் பாலாடைக்கட்டியின் நிறம் நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறியிருந்தால், அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட சீஸ் ஆகும்.


சைவ உணவு உண்பவர்களுக்கு பன்னீர் புரதத்தின் சிறந்த மூலமாகும். உடலின் சிறப்பான செயல்பாட்டுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இதில் உள்ளன என்பதால், சிறந்த ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.  ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 60+ வயதிலும் பிட் ஆக இருக்க... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ