ஏழாவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. அந்த வகையில் ஜனவரி 2023 -இல் அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்ட நிலையில், ஜூலை மாதத்திற்கான அதிகரிப்பு 3 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 45 சதவீதத்தை எட்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஜூன் 2023 ஏஐசிபிஐ இன்டெக்ஸ் எதைக் குறிக்கிறது


ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றன. மே மாதத்தில் 134.7 புள்ளிகளாக இருந்த குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில் ஏஐசிபிஐ ஜூன் குறியீடு இப்போது 136.4 புள்ளிகளை எட்டியுள்ளது. ஜூன் 2023 இல் ஏஐசிபிஐ -இல் மொத்தம் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக செய்தி நிறுவனமான பிடிஐ இடம் பேசிய அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, “ஜூன் 2023க்கான சிபிஐ-ஐடபிள்யூ ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். ஆனால் அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும். தசம புள்ளிக்கு அப்பால் டிஏவை அரசாங்கம் உயர்த்துவதில்லை. இதனால், டிஏ மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. 3% டிஏ ஹைக்.. பம்பர் சம்பளம் உயர்வு 


நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கத்துடன் டிஏவை உயர்த்துவதற்கான முன்மொழிவை உருவாக்கி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும் என்று அவர் விளக்கினார்.


செப்டம்பரில் டிஏ உயர்த்தப்பட வாய்ப்பு?


பிற அறிக்கைகள் அகவிலைபப்டி செப்டம்பரில் அதிகரிக்கப்படும் என்றும், ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறுகின்றன. தற்போது, கிட்டத்தட்ட ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.


கடைசியாக, 2023 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி டிஏவில் திருத்தம் செய்யப்பட்டு, ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது.


முன்னதாக, டிசம்பர் 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் மத்திய அரசு அப்போது அகவிலைப்படியை நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்தியது.


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏன் வழங்கப்படுகிறது?


காலப்போக்கில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்க அளவுகள் CPI-IW மூலம் எதிரொலில்லிறது. விலைவாசி மற்றும் பணவீக்கத்தை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.


அகவிலைபப்டி ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. இப்போது ஏற்படவுள்ள அதிகரிப்பு ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும். அதாவது ஜூலை 2023 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 3% அகவிலைப்படியை கூடுதலாகப் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களது ஊதியத்தில் ஏற்றம் காணப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய பரிசு... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ