7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கின்றது. ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) பற்றிய அறிவிப்பை மோடி அரசாங்கம் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் டிஏ அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் டிஏ உயர்வு, 3 அல்லது 4 சதவீதமாக இருக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 45 அல்லது 46 சதவீதத்தை எட்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பளம் எவ்வளவு உயரும்?


ஜூலை முதலான அகவிலைப்படி அதிகரிப்பு 3 சதவிகிதம் இருக்கும் என ஒரு சாராரும் 4 சதவிகிதம் இருக்கும் என ஒரு சாராரும் கூறுகிறார்கள். அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டாலே, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.  உதாரணமாக, ஒரு ஊழியரின் சம்பளம் மாதம் ரூ.50,000 ஆக இருந்து அவரது அடிப்படை ஊதியம் ரூ.15,000 ஆக இருந்தால், அவர் இப்போது 42 சதவிகித அகவிலைப்படியாக ரூ.6,300 பெற்றுக்கொண்டு இருப்பார். இருப்பினும், அகவிலைப்படி (DA Hike) 3 சதவீதம் உயர்த்தப்பட்டால், அவருக்கு அகவிலைப்படியாக மாதம் ரூ.6,750 கிடைக்கும். இது மாதம் ரூ.450 கூடுதலாகும். எனவே, ஒரு ஊழியர் மாதம்  ரூ.15,000 அடிப்படை ஊதியத்துடன் ரூ.50,000 சம்பளம் பெற்றால், அவருடைய சம்பளம் மாதம் ரூ.450 உயரும்.


டிஏ உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தொழிலாளர் பணியகம் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வாய்ஸ் நோட் மூலம் யுபிஐ-ல் பணப் பரிமாற்றம் செய்வது எப்படி?


ஜூலை 2023 இல் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை 2023 -க்கான அகில இந்திய CPI-IW 3.3 புள்ளிகள் அதிகரித்து 139.7 ஆக இருந்தது. 1 மாத சதவீத மாற்றத்தில், குறியீட்டு எண் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.42 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடந்த மாதம், அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா பிடிஐயிடம், “அகவிலைப்படியில் நான்கு சதவீத புள்ளிகளை கூட்டமைப்பு கோருகிறது. ஆனால், அகவிலைப்படி உயர்வு மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும். டிஏ மூன்று சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும்." என்று கூறினார். 2006 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கிடுவதற்கான சூத்திரத்தை மத்திய அரசு திருத்தியது.


அகவிலைப்படி / அகவிலை நிவாரண சூத்திரம்


அகவிலைப்படி சதவீதம் = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களுக்கு -115.76)/115.76)x100.


மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33)x100.


ஊழியர்கள் தற்போது எவ்வளவு அகவிலைப்படியை பெறுகிறார்கள்?


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகிறது. இரண்டும் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதம் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஆன்லைன் மோசடியில் சிக்கி விட்டீர்களா... நீங்கள் முதலில் செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ