புது டெல்லி: அட்டைகள் இல்லாமல் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தியது. இந்த வசதியின் கீழ் பரிவர்த்தனை வரம்பு ஒரு நாளைக்கு ரூ.20,000 ஆக இருக்கும். இந்த தகவலை வங்கி (ICICI) இன்று அறிவித்தது. இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கியின் 15,000 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். ஐ-மொபைலில் கோரிக்கை மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐசிஐசிஐ வங்கி தனது அறிக்கையில், "டெபிட் கார்டைப் பயன்படுத்தாமல் பணத்தை எடுக்க எளிதான வசதியை இது வழங்குகிறது" என்று கூறினார். வாடிக்கையாளர் டெபிட் கார்டை எடுத்துச் செல்ல விரும்பாதபோது அல்லது மறந்து விட்டால், அத்தகைய சூழ்நிலையில் இந்த சேவையைப் பயன்படுத்தலாம். இந்த வசதியின் கீழ் தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ .20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது.


ஏற்கனவே இந்த வசதியை எஸ்பிஐ வழங்கியுள்ளது:
கடந்த ஆண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் (எஸ்பிஐ - SBI) தனது வாடிக்கையாளர்களுக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தியது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யோனோ பயன்பாட்டின் உதவியுடன் டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எடுக்கலாம். இது மிகவும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. டெபிட் கார்டுகள் மூலம் மோசடி புகார்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வங்கிகள் அட்டை இல்லாத வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.