பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும், உயிரோடு இருக்கும் மனிதர்கள் எம்மாத்திரம்? அனைவருக்கும் அதிக பணம் சம்பாதிக்க ஆசை உள்ளது. அதற்கு மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். சிலர் பணம் சம்பாதிக்க குறுக்குவழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், குறுக்கு வழிகள் நம்மை சிக்கலில் மாட்டிவிடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்களுக்கும் விரைவாக பணம் ஈட்டும் விருப்பம் இருந்தால், வீட்டை விட்டு கூட வெளியேறாமல் லட்சாதிபதி ஆக முடியும் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் எளிதாக லட்சாதிபதி ஆக ஒரு வழியை இந்த பதிவில் காணலாம்.


ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் (Rupee Note) அதன் தனித்துவமான மதிப்பு உள்ளது. உங்களிடம் பழைய 1 ரூபாய் நோட்டு இருந்தால் வீட்டில் இருந்தபடியே லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம். இதை எப்படி செய்வது என்று இங்கே காணலாம்.


சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது


பொருட்கள் பழையதாகும்போது, ​​அவை ஆண்டிக் எனப்படும் பழங்கால வகைக்குள் வருகின்றன. இவற்றுக்கு சர்வதேச சந்தையில் பெரும் தேவை உள்ளது. இதுபோன்ற பொருட்களுக்கு ஈடாக, பெரிய தொகை கிடைக்கின்றது.


ALSO READ: RBI எச்சரிக்கை: பழைய நாணயம், ரூபாய் நோட்டுகளை விற்பவர்கள் கவனத்திற்கு, இதில் கவனம் தேவை!!


நாணயவியல் ஆர்வலர்கள் (பழைய நாணயம் மற்றும் பதக்கம் சேகரிப்பவர்கள்) மற்றும் நோட்டாஃபிலிஸ்டுகள் (ரூபாய் நோட்டுக்களை சேகரிப்பாளர்கள்) அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுக்களை எப்போதும் தேடுகின்றனர். உங்களிடமும் அத்தகைய 1 ரூபாய் நோட்டு இருந்தால், அதை விற்று பணம் சம்பாதிக்க வேண்டிய நேரம் இது.


இந்த இணையதளங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை விற்கலாம்


இதுபோன்ற அரிய நாணயங்களை ஏலம் விடும் வேலையை பல இணையதளங்கள் செய்கின்றன. இதற்கு மிகவும் பிரபலமான இணையதளங்களில் ஒன்று OLX. இதில் லாக் இன் ஐ.டி-ஐ உருவாக்கி, உங்கள் ரூபாய் நோட்டை ஏலம் விட வேண்டும்.


இது தவிர, indiamart.com என்ற மற்றொரு இணையதளத்தில், உங்கள் ஐடியை உருவாக்கியும் ரூபாய் நோட்டை ஏலம் விடலாம். ஏலம் விட உங்கள் ரூபாய் நோட்டின் புகைப்படத்தை நீங்கள் பகிர வேண்டும். இதனுடன், CoinBazzar மற்றும் Quikr போன்ற தளங்களிலும் உங்கள் ரூபாய் நோட்டுகளை விற்கலாம்.


உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் உங்கள் ரூபாய் நோட்டை ஏலம் விட்டவுடன், அதை வாங்குபவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார். பணம் செலுத்துதல் மற்றும் விநியோக விதிமுறைகளுக்கு ஏற்ப உங்கள் ரூபாய் நோட்டை அங்கு விற்கலாம். இந்த தளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது.


முதல் 1 ரூபாய் நோட்டு எப்போது அச்சிடப்பட்டது?


முதல் 1 ரூபாய் நோட்டு 30 நவம்பர் 1917 அன்று அச்சிடப்பட்டது. அந்த குறிப்பில் 5 வது ஜார்ஜ் மன்னரின் படம் இருந்தது. ஊடக அறிக்கைகளின்படி, 1 ரூபாய் நோட்டின் ( 1 Rupee Note) அச்சிடுதல் 1926 இல் நிறுத்தப்பட்டது. ஆனால் அது 1940 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும், 1994 இல் அச்சிடப்படுவது மீண்டும் நிறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 1 ஜனவரி 2015 அன்று மீண்டும் அச்சிடல் தொடங்கியது. அதன் பிறகு இந்த நோட்டு சந்தையில் புழக்கத்திற்கு வந்தது.


ALSO READ: 100 ரூபாய் நோட்டு இனி செல்லாதா? 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறதா RBI?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR