பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் லோட்டே ஷெரிங் பூடானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மருத்துவரான இவர், நாட்டின் பிரதமரான பிறகும் தொடர்ந்து மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சனிக்கிழமைகளில் அந்நாட்டின் ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். 


நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு இவர் சில முறை அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார்.