நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் பனி மனிதனின் கால் தடத்தை இந்திய ராணுவத்தினர் படம் பிடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமயமலையில் எட்டி  எனப்படும் பனி மனிதன் இருப்பதாக பல வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அங்கு மர்மமான கால்தடங்களை இந்திய ராணுவத்தினர் கண்டுள்ளனர். இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.


32 அங்குல நீளமும் 15 அங்குல அகலமும் கொண்ட அளவிலான மர்மமான கால்தடத்தை ராணுவ வீரர்கள் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.