அயர்லாந்தில் உள்ள ஒரு இந்திய ஓட்டலில் இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயர்லாந்தில் டர்பன் பகுதியில் ரவிஸ் கிச்சன் (Ravi’s Kitchen) என்ற பெயரில் இயங்கிவருகிறது இந்திய ஓட்டல். இந்த ஓட்டல் இந்திய உணவுகளுக்காக புகழ்பெற்றது. இந்நிலையில் இந்த ஓட்டலுக்கு மையங் பட்நாகர் என்னும் இந்தியர் தன்னுடைய நண்பர்களுடன் உணவு உன்ன சென்றுள்ளார்.


வெகு நேரமாகியும் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு எந்த பணியாளரும் வரவில்லை. உடனே அவர் அங்கிருந்த பெண் ஊழியரிடம் ஏன் எங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவில்லை என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ”நீங்கள் இந்தியர்கள் ஆதலால் உங்களுக்கு உணவு இல்லை” என பதில் அளித்துள்ளார். இதனை கேட்டு கோபமுற்ற அந்த நபர் மையங் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உணவு கொடுக்காத அந்த ஓட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2,39,553) அபராதம் விதித்து, அந்த தொகையை மையங் பட்நாயருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.