7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி சமீபத்தில் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. முன்னர் 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 42 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வரிசையில் தற்போது பீகார் அமைச்சரவை ஊழியர்களின் நலன் கருதி ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இது தவிர, மாநில அரசின் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்துக்கு கமிஷன் அமைக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.


அகவிலைப்படி 38 -ல் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது


முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பலனை ஜனவரி 1, 2023 முதல் ஊழியர்கள் பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வின் பலனை மாநில அரசின் ஓய்வூதியதாரர்களும் பெறுவார்கள். ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்துடன் மூன்று மாத அகவிலைப்படி தொகையும் கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்; மீண்டும் சம்பள உயர்வு! புதிய ஃபார்முலா அமல்!


சம்பள உயர்வு: கணக்கீடு என்ன? 


அரசாங்கத்தின் இந்த முடிவுக்குப் பிறகு டிஏ 4 சதவீதம் அதிகரித்துள்ளது. உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ. 20,000 என்றால், அதற்கு முன் அவருக்கு 38 சதவீத அகவிலைப்படியாக ரூ.7,600 கிடைத்திருக்கும். இப்போது 4 சதவீத உயர்வுக்குப் பிறகு, இந்த டிஏ 42 சதவீதமாக உயரும். அதாவது அகவிலைப்படியாக ரூ.8400 கிடைக்கும். அதாவது, டிஏவை உயர்த்திய பிறகு, ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.800 (ஆண்டுக்கு ரூ.9600) அதிகரித்தது.


புதிய முறையின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்


இதுதவிர, ஆசிரியர் பணி நியமன மாற்றம் குறித்து, கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.சித்தார்த் சில தகவல்களை அளித்துள்ளார். “இதற்கு முன், ஊராட்சி, தொகுதி, மாவட்ட அளவில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். புதிய விதியின்படி அரசு, ஆணையம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும்.” என்று அவர் கூறினார். “மாற்றப்பட்ட விதிகளின் அடிப்படையில், தற்போது புதிய முறையின் அடிப்படையில் தொடக்கநிலை முதல் மேல்நிலை வரையிலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்” என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இனி வரும் காலங்களில் பீகாரில் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய விதியின்படி, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படாது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஆணையம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று நிரந்தர ஆசிரியர்களாக மாறலாம் என்றும் அவர் கூறினார். 


மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு புதிய செக் வைக்கும் மத்திய அரசு! பலே திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ