Rules Changing in November 2023: நவம்பர் 2023 மக்களுக்கு பல குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருகிறது. எல்பிஜி விலைகள், கேஒய்சி மற்றும் ஜிஎஸ்டி போன்ற பல நிதி சம்பத்தப்பட்ட விதிகள் நவம்பர் 1 முதல் மாற உள்ளது. இவற்றில் சில நம் அன்றாட செலவுகளை கூட பாதிக்கலாம்.  மேலும் நவம்பர் மாதத்தில் பல முக்கிய பண்டிகைகளும் வர உள்ளன.  புதிய பொருட்களை வாங்குவதற்கு மத்தியில், இந்த விதி மாற்றம் நிச்சயமாக மக்களின் வருமானத்தை பாதிக்கலாம். வங்கி விடுமுறைகள் தொடங்கி, நவம்பர் மாதத்தில் தந்தேராஸ், தீபாவளி, பாய் தூஜ், சாத் மற்றும் பிற பண்டிகைகள் காரணமாக பல விடுமுறைகள் உள்ளன. சனி மற்றும் ஞாயிறு உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். உங்கள் வங்கி தொடர்பான வேலையை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிரடி வட்டியை அள்ளிக்கொடுக்கும் ரிசர்வ் வங்கி: உடனே முதலீடு செய்யுங்கள்


இது தவிர, ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் எல்பிஜி, பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி கேஸ் விலைகள் மாற்றம் ஏற்படும்.  இந்த மாதம் அரசு விலையை குறைக்குமா அல்லது அதிகரிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், உங்களின் எல்ஐசி பாலிசிகள் தொடர்பான சில விஷயங்களும் மாற உள்ளன.  காலாவதியான பாலிசியை புதுப்பிக்க, எல்ஐசி பாலிசி மறுமலர்ச்சி பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இன்று முதல் என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


வங்கி விடுமுறை: பண்டிகை காலம் என்பதால் இந்த மாதம் அதிக நாட்கள் வங்கிகள் விடுமுறையில் உள்ளன.  இதுபோன்ற சூழ்நிலையில், வங்கிகள் தொடர்பான பணியை விரைவில் முடித்தால் நல்லது. நவம்பர் மாதத்தில் தந்தேராஸ், தீபாவளி, பாய் தூஜ், சாத் போன்ற காரணங்களால் வங்கிகளுக்கு நிறைய விடுமுறைகள் உள்ளன. சனி மற்றும் ஞாயிறு உட்பட நவம்பரில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை.


எல்பிஜி சிலிண்டர் விலை: எல்பிஜி, பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி கேஸ் ஆகியவற்றின் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் அரசு எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் தீபாவளிக்கு முன் அரசு சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்குமா அல்லது அதிர்ச்சி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும், 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், மக்கள் சிறிது நம்பிக்கையில் உள்ளனர்.


ஜிஎஸ்டி தொடர்பான விதிகளில் மாற்றம்: தேசிய தகவல் மையத்தின் (NIC) படி, 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் கொண்ட நிறுவனங்கள் நவம்பர் 1 முதல் 30 நாட்களுக்குள் இ-சலான் போர்ட்டலில் ஜிஎஸ்டி சலான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


லேப்டாப் இறக்குமதி கட்டுப்பாடு: ஹெச்எஸ்என் 8741 பிரிவின் கீழ் வரும் லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் (பிசிக்கள்) மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அக்டோபர் 30 வரை அரசு தளர்வு அளித்துள்ளது. நவம்பர் 1 முதல் என்ன நடக்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. நவம்பர் 1 முதல் இறக்குமதி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நவம்பர் முதல் தேதியிலிருந்து ஈக்விட்டி டெரிவேடிவ் பிரிவில் பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக மும்பை பங்குச் சந்தை கடந்த அக்டோபர் 20 அன்று தெரிவித்திருந்தது.


கட்டாய KYC: நவம்பர் 1 முதல், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனைத்து காப்பீடுதாரர்களும் KYC செய்துகொள்வதை கட்டாயமாக்கியுள்ளது. இது உங்கள் உரிமைகோரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு அளித்த பம்பர் பரிசு: ஊதியத்தில் அதிரடி உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ