மாட்டுப் பொங்கல் 2024: மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். அதேபோல் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.


மேலும் படிக்க | Pongal 2024: டயட்டில் இருப்பவர்கள் இப்படி பொங்கல் செய்து சாப்பிடுங்கள், வேற லெவலில் இருக்கும்


இந்த நிலையில் இன்று மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வாருங்கள் இப்போது மாட்டுப் பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளே இந்த மாட்டுப்பொங்கல். இந்த பொங்கல் தைமாதம் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும். வைத்த பொங்கலை மாடுகளுக்கு கொடுப்பார்கள். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகள் அனைத்தும் கொம்புகளில் வண்ணம் தீட்டப்பட்டு பொட்டு வைத்து தோரணம் கட்டி பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். கிராமப் புறங்களில் மாடுகளை வண்டிகளில் பூட்டி ஊர்வலம் வருவதை இன்றளவும் நாம் காண முடிகிறது . உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும்கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.


மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?
மாட்டுப் பொங்கல் அன்று காலையிலேயே மாடுகளை சுத்தமாக குளிக்க வைத்து, சந்தனம், குங்குமம் வைத்து, அதன் கொம்புகளுக்கும் வண்ணங்கள் தீட்டி அலங்கரிப்பார். மாட்டின் கொம்பில் பரிவட்டம் போல் வேட்டி, துண்டுகளை கட்டி கெளரவிக்கும் வழக்கமும் சில பகுதிகளில் உண்டு. பொங்கல் அன்று வாசலில் மாவிலை தோரணங்கள், கரும்பு வைத்து கொண்டாடுவதைப் போல், மாட்டுப் பொங்கல் அன்று மாட்டுத் தொழுவத்தை கோலமிட்டு அலங்கரித்து, சாம்பிராணி காட்டி, மாடுகள் வசிக்கும் இடத்தில் பொங்கல் வைத்து, வாழை இலை பரப்பி மாடுகளுக்குச் சர்க்கரைப் பொங்கலைப் படைப்பார்கள். சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து படைத்து, மாடுகளுக்கு கற்பூரம் காட்டி வழிபடுவதுண்டு. அதேபோல் இன்று காலை 11 முதல் பகல் 1 மணி வரை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரமாக கூறப்படுகிறது. மாடுகளுக்கு பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மற்றும் 11 மணி முதல் 12 மணி வரை ஆகும்.


மேலும் படிக்க | Pongal 2024 Rangoli: வீட்டில் ரங்கோலி கோலம் ஏன் போட வேண்டும் என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ