இந்தோனேஷியாவில் ஆண், பெண் இணைந்து உணவகம் சென்று உண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமிய மத நடவடிக்கைகளை பின்பற்றி வரும் இந்தோனேஷியாவின் ஆச்சே என்னும் கிராமத்தில் ஆண், பெண்கள் ஒன்றாக இணைந்து உணவகம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு ஒன்றாக செல்லும் நபர்க்கள் தம்பதியராய் இருத்தல் வேண்டும், இல்லையேல் உறவின்றாக இருத்தல் வேண்டுமென இந்த சட்டம் தெரிவிக்கின்றது.


இஸ்லாமிய நகரங்களை ஒப்பிடுகையில் ஆச்சே கிராமம் தான் உலகிலேயே மிக அதிகாமாக இஸ்லாமிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதே வேலையில் சூதாட்டம், குடி, ஓரினச்சேர்க்கை போன்ற நடவடிக்கைகள் ஏதும் இல்லா நகரம் என்னும் பெயரை எடுத்ததன் மூலம் உலக கவனத்தினையும் ஈர்த்துள்ளது இந்த கிராமம்.


அந்த வகையில் தற்போது இந்த நகரத்தில் புதிய இஸ்லாமிய கொல்களை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்களும் பெண்களும் ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஆண், பெண் கூட ஒரே மேசையில் அமர்ந்து உண்ண கூடாது என இந்த கட்டுப்பாடு தெரிவிக்கின்றது.


அதே வேலையில் தனியாக உணவகம் வந்துள்ள பெண்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் உணவு பரிமாரக்கூடாது எனவும் இந்த சட்டம் தெரிவிக்கின்றது. 


இந்த சட்டத்தின் நோக்கம் பெண்களின் பாதுகாப்பினை பேனுதல் என தெரிவிக்கின்றனர். இத்தகு செயல்களால் பெண்கள் தாங்கள் சுதந்திரமாய் இருப்பது போல் உணர்வர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்னாதக இதே கிராமத்தில் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இணைந்து இரவு 11 மணிக்கு மேல் கேலிக்கை விடுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்ககது!