கவுகாத்தியில் உள்ள ATM மெஷினுக்குள் புகுந்த எலி ஒன்று அதில் இருந்த 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கடித்து குதறி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஒரு மாதமாக அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள லாய்புலி பகுதியை சேர்ந்த SBI வங்கி ATM வேலை செய்ய வில்லை மேலும் ATM மெஷின் இந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது. இந்த ATM-ஐ சரிசெய்ய, கடந்த ஜூன் 11ம் தேதி வேலை ஆட்களை வங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளது. ATM-ஐ திறந்து பார்த்த ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.


நீண்ட நாளாக செயல் இழந்து பயன்பாட்டின்றி இருந்த இந்த ATM-க்குள் புகுந்த எலி ஒன்று, மெஷினில் நிரப்பப்பட்டிருந்த 2000, 500 ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து குதறி நாசமாகி உள்ளது. இதில் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து SBI வங்கி புகார் அளித்துள்ளது. இதனால் டின்சுகியா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.