இதுவரை ஆண்கள் செய்யாத ஒன்றை எனது நாய் எனக்கு செய்ததால் நாயையே தான் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த இளம்பெண்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தின் கிழக்கு எஸ்காட் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய எலிசபெத் ஹோட் என்ற பிரபல மாடல். இவருக்கு முன்பிருந்தே ஆண்கள் மீது அதிகமான வெறுப்பு இருந்துள்ளது. இந்த வெறுப்பால் அவர் ஆண்களை நம்புவதே இல்லையாம். இதற்கு காரணம் அவர் இதற்கு முன்னர் 200-க்கும் அதிகமான ஆண்களை சந்தித்தும் அவர்கள் யாரும் எலிசபெத்திற்கு உறுதுணையாக இருந்தது இல்லையாம். மேலும் இரண்டு முறை திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டு இரண்டு முறையும் தடைபட்டுள்ளது. 


இந்நிலையில், எலிசபெத் தான் வளர்த்து வரும் செல்லப்பிராணியான லோகன் என்ற நாயை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். தான் வருத்தமாக இருக்கும்போது எல்லாம் தனக்கு லோகன் தான் ஆறுதலாக இருப்பதாகவும், அதனால் லோகனையே வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். 


இதை கேள்விபட்ட அவரது உறவினர்கள் பலர் எலிசெபத் தனது நாயை திருமணம் செய்யும் முடிவை மாற்றும்படி அறிவுரை சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை. இதனால் அவரது உறவினர்கள் எலிசெபத்திற்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக கூறி அவரை விட்டு விலகி சென்று விட்டனர். தன்னிடம் பழகிய ஆண்கள் செய்யாததை தான் வளர்த்த நாய் செய்வதால், நாயையே திருமணம் செய்ய பெண் ஒருவர் முடிவு செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.