புதுடெல்லி: நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (Northern Coalfields Limited (NCL)) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 1500 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். ஜூன் 8 முதல் இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் அனுப்பும் நடைமுறை தொடங்கிவிட்டது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.nlcindia.in/ இல் ஜூலை 9 வரை விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வித்தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு அல்லது 10 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன், ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 16 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேவையான கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.  


தேர்வு நடைமுறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியானவர்கள் https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைனில்   விண்ணப்பிக்கலாம்.


Read Also | Delta Plus Variant அறிகுறிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிகிச்சை: முழு விவரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR