வங்கியில் பணியாளர் தேர்வாணையத்தின் (IBPS) இன்ஸ்டிடியூட் இன்று பிரதான வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் (CWE CLERKS-VIII) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

7,260-க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்விற்கு அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்நிலையான ஆரம்ப நிலை தேர்வில் தேர்ச்சி பெரும் நபர்கள், இரண்டாம் கட்ட தேர்வான முக்கிய தேர்வுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். 


இந்த தேர்விற்கான ஆன்லைன் பதிவு வரும் செப்டம்பர் 18-ஆம் நாள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10, 2018 வரை நடைபெறும் ஆன்லைன் பதிவில் பதிவு செய்யும் வேட்பாளர்களில் தகுதியுடையவர்களுக்கு டிசம்பர் 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முதல்நிலை தேர்வுகள் நடத்தப்படும். 


இத்தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் ஜனவரி 20, 2019 அன்று நடைப்பெறும் முக்கிய தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பின்னர் தேர்வின் முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு தேர்வாகும் வேட்பாளர்களுக்கு உரிய பணியிடங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு....