பழைய ஓய்வூதியத் திட்டம்: ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவின்படி, அரசு நிதியுதவியுடன் இயங்கும் அரசு வாரியங்கள், மாநகராட்சிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முனிசிபல் கார்ப்பரேஷன்கள், யுஐடிகள், மின் நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள், வாரியங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பணியாளர்கள் புதிய முடிவின் வரம்பிற்குள் வருவார்கள். இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பலன் பெறுவார்கள்.


ஜூன் 15 ஆம் தேதிக்குள் படிவத்தை நிரப்புவது அவசியம்


புதிய முடிவின்படி, பழைய ஓய்வூதியத்தைப் பயன்படுத்த, அரசின் நிதித் துறையால் வழங்கப்பட்ட படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த படிவத்தை பூர்த்தி செய்து ஜூன் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நிதித்துறை பிறப்பித்த உத்தரவின்படி, இதுபோன்ற நிறுவனங்களில் பழைய ஓய்வூதிய பலன் கிடைப்பதில்லை. அத்தகைய நிறுவனங்களுக்கு ஜிபிஎஃப் இணைப்பு ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த, புதிய விதிகளை உருவாக்கி ஓய்வூதிய நிதியை அமைக்க வேண்டியது அவசியம். இந்த நிறுவனங்கள் ஓய்வூதியத் தொகையை மாநில அரசின் பிடி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: மத்திய அரசு எடுத்த பெரிய முடிவு


ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்


இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, இபிஎஃப் அல்லது சிபிஎஃப் -இல் பணம் வாங்கிய ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்த விரும்பினால், அத்தகைய ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்திற்கான விருப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். இது தவிர, இபிஎஃப் அல்லது சிபிஎஃப் -இலிருந்து பெறப்பட்ட தொகையை 12 சதவீத வட்டியுடன் டெபாசிட் செய்ய வேண்டும். பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஓய்வூதிய விருப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.


இதன் மூலம், ஜூன், 30ம் தேதி வரை, ஓய்வு பெற்ற ஊழியர்களின் வைப்புத்தொகைக்கான வட்டியை, நிதித்துறையால் கணக்கிட முடியும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் முழுத் தொகையையும் ஜூலை 15க்குள் டெபாசிட் செய்யலாம்.


மேலும் படிக்க | Old Pension குறித்த நிலைப்பாட்டை மாற்றிய அரசு: கொண்டாட்டத்தில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ