7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஆண்டு பல சலுகைகளை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில், இமாச்சல பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் (6th Pay Commission) கீழ் புதிய ஊதிய விகிதத்தை அறிவித்துள்ளது. இந்த தகவலை அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை ஒப்பந்த பணியாளர்கள் மூன்றாண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேச (Himachal Pradesh) அரசிதழ் அல்லாத ஊழியர் சம்மேளனத்தின் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவில் (JCC) முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் பேசுகையில், மாநில அரசு ஊழியர்களுக்கான (7th Pay Commission) புதிய ஊதிய விகிதங்களை அறிவித்தார். இது ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வரும். ஜனவரி, 2022க்கான சம்பளம், திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தின்படி பிப்ரவரி, 2022ல் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு 


மாநில அரசு தனது மொத்த பட்ஜெட்டில் சுமார் 43% ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக செலவிடுகிறது என்று ஜெய் ராம் தாக்கூர் கூறினார். ஆறாவது ஊதியக் குழு அமலுக்குப் பிறகு, இது 50 சதவீதமாக உயரும். அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி 1, 2016 முதல் திருத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார்.


மறுபுறம், மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு நற்செய்தி வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், மத்திய ஊழியர்களின் சம்பளமும் உயரும். ஊழியர்களின் மனித வளத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர் சங்கம் (IRTS) மற்றும் ரயில்வே நேஷனல் ஃபெடரேஷன் (NFIR) ஆகியவை பரிசீலித்து வருகின்றன.


X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களுக்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வகை பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, X பிரிவில் வரும் ஊழியர்களுக்கு இனி மாதம் ரூ.5400க்கு மேல் HRA கிடைக்கும். இதற்குப் பிறகு, Y வகுப்பைச் சேர்ந்தவர் மாதம் ரூ.3600 பெறுவார்கள், பிறகு Z வகுப்பைச் சேர்ந்தவர் ரூ.1800 பெறுவார்கள்.


50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் உள்ள மத்திய பணியாளர்களுக்கு 27% HRA கிடைக்கும். இது Y வகை நகரங்களில் 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் இருக்கும்.


ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR