மகள் திருமணத்திற்கு நேரில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 11ம் தேதி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 


இந்த திருமண நிகழ்ச்சியில் இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


இந்நிலையில் மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், என் மகள் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணன், திருநாவுக்கரசர், அமர்நாத், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, கமல்ஹாசன், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், காவல் துறை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


 



 


 



 


 



 


 



 


 


 


 


இவ்வாறு அறிக்கை மூலம் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.