ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரோபோ கிச்சன் எனப் பெயர் கொண்ட அந்த உணவகத்தில் 4 எந்திர மனிதர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளன. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒருநாள் முழுவதும் பணியாற்றும் திறன் பெற்ற எந்திர மனிதர்கள், வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



சென்னையிலும் இதேபோல் ஒரு உணவகத்தில் எந்திர மனிதர்கள் உணவு விநியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதை பார்த்து தாங்களும் இதுபோல் செய்துள்ளதாக ரோபோ கிச்சன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.