பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஓவியா. அதே போல் பிக் பாஸ் பட்டத்தை வென்ற ஆரவ், மக்களிடம் மிகவும் பிரபலமாவதற்கு காரணம் ஓவியாவும் ஒருவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஆரவை காதலித்தார். இருப்பினும் ஆரவ் அவரின் காதலை நிராகரித்தார். அதன் பின் ஓவியா தற்கொலைக்கு முயன்றது, மருத்துவ முத்தம் என பல நடந்தது அனைவரும் அறிந்ததே.


இவர்கள் இருவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருவரை ஒருவர் சந்திக்க வில்லை. இருவருமே தற்போது நடிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் அனைவராலும் நேசிக்கப்பட்ட இந்த ஜோடி தற்போது இணைத்து ஒரூ செல்பி எடுத்து உள்ளார். அந்த செல்பி சமூக வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்த செல்பி புகைப்படத்தை ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக செல்பி எடுத்து உள்ளார்.