இந்த உணவகத்தில் உணவை வீண் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெலுங்கானாவில் உள்ள ஒரு உணவகம் தெரிவித்துள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவை வீண் செய்தால் அபராதமும், உணவை மிச்சம் வைக்காமல் சாப்பில்டால் பரிசும் வழங்கப்படுகிறது. உணவு வீண் செய்யப்படுவதை தவிர்க்க ஹோட்டல் உரிமையாளர் இந்த நூதன முயற்சியை கையாண்டு வருகிறார். 


தெலுங்கானா மாநிலம் அருகே வாரங்கலில் உள்ள ஹனுமகொண்டா கோர்ட் நாற்கூடலி அருகே லிங்காகோதரி என்பவர் சிறிய உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு வாடிக்கையாளராக வருபவர்கள் உணவை வீணடித்தால் அவர்களுக்கு ரூ. 50 அபராதம் விதிக்கப்படுகிறது. 


இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உணவகத்தில் சாப்பிடுவதற்கு முன்னர் ரூ 60 செலுத்தி ஒரு டோக்கன் ஒன்றை வாங்கி கொள்ள வேண்டும். அவர்கள் உணவு உண்ணும் போது அவர்கள் உணவை வீணடிக்காமல் சாப்பிட்டால் அந்த டோக்கனின் மதிப்பு ரூ 70 ஆக மாறிவிடும். அதன் பின் அவர்கள் தங்கள் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு ஆகிய பணத்தில் ரூ 70 கழித்துக்கொண்டு மீதப்பணத்தையும் ரூ 70-க்கான டோக்கனையும் பில்லுடன் செலுத்தினால் போதும். 


இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், இது வரை அவர் ரூ. 14,000 வசூலித்துள்ளதாகவும், அந்த பணத்தை ஒரு அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக வழங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். உணவை வீண் செய்யகூடாது என்பதே எனது நோக்கம். உணவுகளை வீணடிக்கிறவர்கள் மீது நான் கடமைப்பட்டிருக்கிறேன்," என்றார் கெடரி. 


இப்போதெல்லாம் என் இடத்திற்கு வந்தவர்கள் உணவுகளை வீணாக்காதபடி கவனமாக இருக்கிறார்கள். தண்டனையின் பல சம்பவங்கள் கீழே வந்துவிட்டன, என்று அவர் கூறினார்.