தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பெண்ணை வம்பிழுத்த இந்திய இளைஞர்; வம்பிளுத்தவரின் உதட்டை கடித்து துப்பிய பெண்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாய்லாந்திற்கு இந்தியாவை சேர்ந்த சாஷாங்க் அகர்வால் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். இதையடுத்து, அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தாய்லாந்தில் உள்ள பட்டாயா பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது வழியில் வீடு திரும்பி கொண்டிருந்த, அந்நாட்டு பாலியல் தொழிலாளியான சுகன்யா பபேக் என்ற  பெண்ணிடம் பேசிக் கொண்டே நடந்து உள்ளார். அப்போது  திடீரென அந்த பெண் மீது கை வைத்து பாலியல் ரீதியில் சாஷாங்க் அகர்வால் தொந்தரவு செய்துள்ளார்.  


சிறிது நேரம் கழித்து திடீரென அந்த பெண் சாஷாங்கை தாக்கி அவருடைய உதட்டினை கடிக்க ஆரம்பித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, இருவரையும் பிரித்து விட்டனர். 


இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துரையினர் விரைந்து வந்துள்ளனர். சாஷாங்க் அகர்வாலின் கீழ் உதடு பாதிக்கப்பட்டு ரத்தத்துடன் ஓடிவந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சையளித்துள்ளனர். 


இதற்கிடையில் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லபட்ட சுகன்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவன் யார் என்றே எனக்கு தெரியாது. நான் என்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது தான் இருவரும் பேச ஆரம்பித்தோம். அப்பொழுது திடீரென அவர் என்னுடைய கையை பிடித்து இழுக்க ஆரம்பித்ததோடு, என்னுடைய கன்னத்தில் அறைந்தார். பிறகு என்னுடைய பாதுகாப்பிற்காகவே நானும் அவரை தாக்க ஆரம்பித்தேன். இதில் என் மீது எந்த தவறும் இல்லை என அந்த பெண் கூறியுள்ளார்.