திருமணமாகி 24 மணி நேரத்திற்கு முன்பே மனைவி கணவன் விரதட்சனை தரவில்லை என கூறி விவாகரத்து செய்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். இந்நிலையில், தனது திருமணத்தில் பெண்வீட்டார் முழு வரதட்சனையும் தரவில்லை என திருமணமாகி 24 மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். 


திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. 


இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சஹாஹே அலாம் என்பவருக்கும் ருக்சானா பனோ என்ற பெண்ணிற்கும் கடந்த 13 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளதுள்ளது. இதையடுத்து, திருமணத்திற்கு பின் மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டில் வரதட்சணை பொருட்களை கொண்டு வந்து இறக்கியுள்ளனர். அப்போது, பெண்வீட்டாரிடம் மாப்பிள்ளை ஏற்கனவே தனக்கு டூவீலர் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. 


ஆனால், பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சனையாக வந்த பொருட்களில் இருசக்கர வாகனம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அலாம் திருமணமான 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ருக்சனாவின் வீட்டார் அலாம் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.