பிரபலமான ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அதன் பிரமாண்டமான துவக்கத்திலிருந்து 50 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது, இன்று 51 வது நாளில், போட்டியாளர்களுக்கு புதிய பணி ஒதுக்கப்பட்டுள்ளது, இது இரண்டு நாட்களுக்கு தொடரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக் பாஸ் வீடு கால் சென்டர் வீடாக மாறும், அங்கு இரண்டு குழுக்கள் அணி A மற்றும் அணி B என பிரிக்கப்படுகின்றன. ஒரு குழு கால் சென்டர் நபர்களைப் போலவே பதிலளிக்க வேண்டும், மற்ற குழு கேள்விகளை எழுப்புகிறது. 



 


ALSO READ | 'பிக் பாஸ் தமிழ் 4' இல் மீண்டும் நுழையும் இந்த பிரபலம்?


இந்நிலையில் இன்று பிக் பாஸ் (Bigg Boss Tamilவீட்டில் கால்சென்டர் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. கால்செண்டர் ஊழியர்களாக ரம்யா, சம்யுக்தா மற்றும் பாலாஜி ஆகியோர் இருக்க அவர்களிடம் சக போட்டியாளர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் கேள்விகள் கேட்பதற்கு எந்த விதமான வரைமுறையும் இல்லை என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.



இதனை அடுத்து அர்ச்சனா பாலாஜிக்கு கால் செய்து ‘உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்களை முன் வைத்து விளையாடுகிறீர்கள்; என்று நீங்கள் கூறினீர்கள். அவர்கள் பெயர்களை தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியபோது பாலாஜி ஓபனாக, ‘முதலில் நீங்கள் முன்னிறுத்தி விளையாடுவது சோம், இரண்டாவதாக ரியோ, மூன்றாவதாக கேபி என்று உண்மையை பகிர்ந்துள்ளார்.



இதனை அடுத்து வரும் நாட்களில் அர்ச்சனா மற்றும் பாலாஜி இடையே கடுமையான விளையாட்டு ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


ALSO READ | சுசித்ரா வெளியேற்றம், இந்த வாரம் நாமினேட் ஆன 7 போட்டியாளர்கள் இவர்களே!


 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR