Green Deposit: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) ஆகியவற்றுக்கு பசுமை டெபாசிட்டை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறையை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் கீழ், இன்று முதல் அதாவது ஜூன் 1ஆம் தேதி முதல், நிதி நிறுவனங்கள் பசுமை டெபாசிட்களை (Green Deposit) வழங்குவதுடன், அதனை ஏற்றுக்கொள்வதையும் தொடங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை போக்குவரத்து மற்றும் பசுமை கட்டடங்களை கட்டுவதற்கு இத்தகைய நிதியை பயன்படுத்தலாம். ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் வங்கி, டிபிஎஸ் வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா போன்ற சில ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பசுமை நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக பசுமை டெபாசிட்டுகளை வழங்குகின்றன என்பதை விளக்குங்கள்.


பசுமை டெபாசிட் என்றால் என்ன?


பசுமை டெபாசிட் என்பது முதலீட்டாளர்களுக்கான நிலையான கால வைப்புத்திட்டமாகும். தங்கள் உபரி நிதியை சூழலியலுக்கு உதவும் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பசுமை டெபாசிட்கள் கிடைக்கின்றன, இது மற்ற டெபாசிட்களை போல் இல்லை. இது தவிர, முதிர்வு அல்லது மீட்பு உள்ளிட்ட அனைத்து விதிகளும் மற்ற டெபாசிட் திட்டங்களை போன்றுதான்.


மேலும் படிக்க | வங்கிகளை விட அதிக வட்டி அளிக்கும் அசத்தலான சேமிப்புத் திட்டங்கள்: முழு பட்டியல் இதோ


ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை உட்பட ஒன்பது துறைகளில் பசுமை டெபாசிட் வசதியை நிதி நிறுவனங்கள் நீட்டிக்கும். மற்ற எட்டு துறைகளில் ஆற்றல் திறன், பசுமை கட்டிடம், சுத்தமான போக்குவரத்து, நிலையான நீர் மற்றும் கழிவு மேலாண்மை, மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, வாழும் இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை, நிலப்பரப்பு மற்றும் நீர்வாழ் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நில பயன்பாடு ஆகியவை அடங்கும்.


இதன் பயன் என்ன?


உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் காலநிலை மாற்றம் என்பது மிகவும் கடுமையான சவால்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன். கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும் உலகளவில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி ஏப்ரல் 11 அன்று வங்கிகள் பசுமை டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையை வெளியிட்டது.


ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த வழிமுறையில்,"பசுமை செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதிலும், ஒதுக்குவதிலும் நிதித்துறை முக்கிய பங்கு வகிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு பசுமை வைப்புத்தொகையை வழங்குவதற்கும், வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களை ஊக்குவிப்பதே இந்த கட்டமைப்பின் நோக்கமாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ அதிரடியாக அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ