White Hair Home Remedies: வயது ஏற ஏற நரை முடி என்பது இயற்கையானது, ஆனால் இந்த நரை முடியை கருமையாக்க நாம் ரசாயன சாயங்கள் சந்தையில் இருந்து வாங்கி உபயோகம் செய்கிறோம். இந்த இரசாயனங்கள் காரணமாக, கூந்தலில் பல்வேறு சேதங்கள் ஏற்பட தொடங்கிவிடுகிறது. அதே நேரத்தில், ரசாயன சாயங்கள் சில நாட்களுக்கு மட்டுமே விளைவைக் காட்டும். மேலும் மீண்டும் கூந்தலின் வெண்மை 15 முதல் 20 நாட்களுக்குள் திரும்பிவிடும். அத்தகைய சூழ்நிலையில், இயற்கையான கூந்தல் சாயத்தை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவதே சிறந்த தீர்வு. இந்த ஹேர் டையை (Natural Hair Dye) தயாரிப்பது மிகவும் எளிதானது மட்டுமின்றி கூந்தலை கருப்பாக மாற்றவும் உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரை முடிக்கு இயற்கையான ஹேர் டை | Natural Hair Dye For White Hair:
கருமையான கூந்தல் வேண்டுமென்றால் மருதாணி மற்றும் இண்டிகோவை ஒன்றாகக் கலந்து கூந்தலில் பயன்படுத்தலாம். இப்போது இந்த நேச்சுரல் ஹேர் டையை தயாரிக்க, முதலில் மருதாணி, தயிர், உப்பு, தண்ணீர் மற்றும் இண்டிகோ பவுடர் உங்களுக்கு தேவைப்படும். பின்னர் தயிர் மற்றும் மருதாணியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும், அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும், நல்ல பேஸ்ட் வடிவில் செய்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை இரவு முழுவதும் கூந்தலில் தடவி ஊற வைக்கவும். மறுநாள் காலையில் சம அளவு மருதாணி மற்றும் இண்டிகோ பவுடர் சேர்த்து சிறிது உப்பு சேர்க்கவும். இந்த தயாரிக்கப்பட்ட கலவையை கூந்தலில் 2 மணி நேரம் தடவி, அதன் பின்னர் கூந்தலை சுத்தம் செய்யவும். இதன் மூலம் கூந்தலில் அடர் கருப்பு நிறம் வர ஆரம்பிக்கும்.


இந்த ஹேர் டையைப் பயன்படுத்திய பிறகு, அடுத்த 24 மணி நேரத்திற்கு உங்களது கூந்தலில் ஷாம்பு அல்லது கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். இதை பின்பற்றினால் நீங்கள் ஆழமான மற்றும் திடமான கருப்பு நிறத்தை பெறலாம்.


மேலும் படிக்க | எகிறும் உடல் எடையை பட்டுனு குறைக்க உதவும் பச்சை உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க| 


கூந்தலை கருமையாக்க இந்த முறைகளும் பயனுள்ளதாக இருக்கும்:
கூந்தலை கருமையாக்க, பிளாக் டீ தண்ணீரை தொடர்ந்து நரை முடியில் தடவி வந்தால், வெள்ளை முடி கருப்பாக மாற ஆரம்பிக்கும். இதற்கு ஒரு கப் தண்ணீரில் மூன்று ஸ்பூன் பிளாக் டீ இலைகளை கொதிக்க விடவும். இப்போது இந்த தண்ணீரை குளிர்விக்கவும். பின்னர் உங்கள் தலைமுடியைக் கழுவ இந்த தண்ணீரைப் பயன்படுத்தவும். இல்லையெனில் கூந்தலில் நரை முடி இருக்கும் இடத்தல் சற்று தடவி அரை மணி நேரம் வைத்திருந்து கழுவலாம்.


இரண்டு வழி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தலைமுடியில் தடவி வந்தால், கூந்தல் இயற்கையாகவே கருப்பாக மாற ஆரம்பிக்கும். இதற்கு ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து அரை கப் தேங்காய் எண்ணெயில் கொதிக்க விடவும். இந்த எண்ணெயை இரவு முழுவதும் தலையில் தடவி வைத்த பின்னர் கழுவலாம். இது வேர்களில் இருந்து முடியை கருமையாக்க உதவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க வீட்டிலேயே இப்படி பண்ணுங்க போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ