ATM-லிருந்து ₹.10,000-க்கு மேல் பணம் எடுக்க இனி மொபைல் ஃபோன் கட்டாயம்!!
![ATM-லிருந்து ₹.10,000-க்கு மேல் பணம் எடுக்க இனி மொபைல் ஃபோன் கட்டாயம்!! ATM-லிருந்து ₹.10,000-க்கு மேல் பணம் எடுக்க இனி மொபைல் ஃபோன் கட்டாயம்!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/09/16/169279-sbi-rec.jpg?itok=ny47ME64)
SBI ATM-ல் இருந்து ரூ.10,000 க்கு மேல் பணம் எடுக்க பெறுகிறீர்களா?... அப்போ உங்கள் மொபைலை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்!!
SBI ATM-ல் இருந்து ரூ.10,000 க்கு மேல் பணம் எடுக்க பெறுகிறீர்களா?... அப்போ உங்கள் மொபைலை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்!!
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது ATM நெட்வொர்க்கிலிருந்து மோசடி பரிவர்த்தனைகளைத் தடுக்க புதிய விதிகளை இயற்றியுள்ளது, இது இரண்டு நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும், அதாவது செப்டம்பர் 18 முதல். செப்டம்பர் 18 முதல் 24 மணிநேரத்திற்கு ரூ .10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் வசதி அதன் ATM-களில் கிடைக்கும் என்று வங்கி செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது, SBI ஏடிஎம்களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரிவர்த்தனைகளுக்கு இந்த கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. செய்தி அறிக்கையின் படி, இந்த முயற்சி வாடிக்கையாளர்களை மோசடிகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வங்கியின் செய்திக்குறிப்பின் படி, "ரூ.10,000 மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு, SBI டெபிட் கார்டுதாரர்கள் இப்போது ஒவ்வொரு முறையும் தங்கள் டெபிட் கார்டு பின் உடன் பதிவுசெய்த மொபைல் எண்களில் அனுப்பப்பட்ட OTP-யை உள்ளிட வேண்டும்."
பரிவர்த்தனைகள் சீராக முடிவடைவதை உறுதி செய்வதற்காக வங்கியின் பதிவுகளில் சரியான மொபைல் எண்கள் புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும் வங்கி தனது வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளது.
ALSO READ | ஏர்டெல் Vs JIO Vs Vi: ஒர்க் பிரேம் ஹோம் ப்ரீபெய்டு திட்டத்தில் சிறந்தது எது?
ஒரு வாடிக்கையாளர் தான் பெற விரும்பும் தொகையை குறிப்பிட்டவுடன், ATM திரை OTP-யை கேட்கும், அவளின் / அவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அவரது OTP எண் அனுப்பப்படும் பெற்றிருப்பார். நினைவில் கொள்ளுங்கள், OTP- அடிப்படையிலான பண பரிவர்தனை பெறும் வசதி SBI ஏடிஎம்களில் மட்டுமே கிடைக்கிறது. எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் இந்த செயல்பாடு தேசிய நிதி சுவிட்சில் (NFS) உருவாக்கப்படவில்லை. வழக்கமாக, மற்றொரு வங்கி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது எப்பவும் போல எளிமையாக இருக்கும்.
ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க:
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR