பட்டபகலில் பொது இடத்தில் ஆடைகளின்றி மது போதையில் செக்ஸ் வைத்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் பட்டபகலில் ஒரு ஆணும் பெண்ணும் ஆடைகளின்றி உடலுறவு மேற்கொள்ளும் வீடியோ வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை கண்டித்து பலர் சமூகவலைதளங்களில் தன்களின் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த ஆரம்பித்தனர். 


அப்போது, பல திடுக்கிடும் கதவல்கள் வெளியானது. வைரலாக பரவிய வீடியோ எடுக்கப்பட்ட இடம் ஆக்ஸ்ஃபோர்டுஷேர் பகுதி என்றும் கடந்த மே 11 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்ததது. மேலும் பட்டபகலில் பொதுமக்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் அதிகம் வரும் பூங்காவில் ஆடைகளை அவிழ்த்து உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இருவரும் போதை பொருளை உட்கொண்டிருந்தார்கள் எனவும் அதனால் மெய் மறந்து அவர்கள் உடலுறவில் ஈடுபட்டர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 




இந்த சம்பவம் குறித்து 30 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டது மற்றும் போதை மருந்துகளை உட்கெண்டது ஆகிய பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்; "நடந்த சம்பவத்திற்கு சாட்சியாக அந்த நேரத்தில் பார்க்கில் அதை பார்த்த யாரும் வரவில்லை. இந்த வீடியோவை எடுத்தவரையும் தொடர்பு கொண்டு சாட்சியம் அளிக்கும் படி கேட்டோம் அவரும் மறுத்துவிட்டார். இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயம் தான். ஆனால் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் பொது இடத்தில் நடந்தால் மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" காவல்துறையினர் அறிவுறுத்தினர்.