சபரிமலை ஐயப்பன் கோயிலில் கட்டுபாட்டுப்படி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இவ்வயதுக்குள் உள்ள பெண்கள் சிலர் தவறான வயதை கூறி கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


இதையடுத்து வயதுச் சான்று அடிப்படையில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இனி இந்த ஆண்டு முதல் வயதுச்சான்று நடைமுறை தொடங்கப்படும்.