வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாதாவர்கள் இருக்க முடியுமா என்ன... உங்களுக்கும் சொந்த வீடு வாங்கும் ஆசை இருந்தால், வாராஹி அம்மனை நினைத்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும். உங்கள் வீட்டினருகில் வாராஹி அம்மன் கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்றும் பூஜை செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்களுடைய வீட்டில் வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து பூஜையை தொடங்கலாம். வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய மன தயக்கம் கொண்டவர்கள், வீட்டில் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி அந்தச் சுடரைக் அம்மனாக பாவித்து பூஜை செய்யலாம்.


மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்


செவ்வாய்க் கிழமைகளில் மாலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய வேண்டும். பூஜைக்கு முன்பு சுத்தமாக குளித்த பிறகு பெண்களாக இருந்தால் குங்கும பொட்டு இட்டுக்கொண்டு, அதன் பின்பு சிறிதளவு அரகஜாவை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். அரகஜா என்பது ஒரு வாசனை திரவியம். மற்ற வாசனை திரவியங்கள் கலந்து மை போல தயாரிக்கப்படுவது. இதற்கு வசீகர சக்தி உள்ளதாக நம்பிக்கை. ஆண்களாக இருந்தால் அரகஜா மற்றும் விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.


வாராஹி அம்மனுக்கு 9 செவ்வாய்க் கிழமையிலும், 9 வகையான பிரசாதங்களை நிவேதனமாக வைக்கலாம். பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் வராகி அம்மனுக்கு மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்றால் வாராஹி அம்மனுக்கு மிகவும்பிடிக்கும். மரவள்ளி கிழங்கு, சேனை கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு இந்த கிழங்குகளை கூட வேகவைத்து பிரசாதமாக வைக்கலாம். பழங்களில் மாதுளை பழம் அம்மனுக்கு உகந்த பழமாக சொல்லப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் பூக்களால் வாராஹி அம்மனுக்கு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு பூஜையறையில் அமர்ந்து பின் கீழ்கண்ட மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.


பூஜைக்கான மந்திரம்:


ஓம் குண்டலினி புரவாசினி, சண்டமுண்ட விநாசினி, பண்டிதஸ்ய மனோன்மணி, வாராஹீ நமோஸ்துதே! அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி, அஷ்டதாரித்ரய நாசினி இஷ்டகாமப்ரதாயினி, வாராஹீ நமோஸ்துதே!


மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு உங்களுடைய வேண்டுதலை வாராகி தாயிடம் சொல்லுங்கள். பெற்ற அன்னையை போல், வாராஹி தாயை நினைத்துக்கொண்டு கஷ்டங்களை கூறுங்கள். நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்களுக்கு அந்த தாய் செவி சாய்ப்பாள். வாராஹி தேவி நம்பியவர்கள் யாருமே கைவிடப்பட்டது இல்லை.


இந்த பூஜையை செய்யும் பெண்கள், மாதவிடாய் நாட்களில் இந்த வழிபாட்டை தவிர்த்துவிட்டு அடுத்து வரக்கூடிய வாரத்தை கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் கட்டாயமாக ஒன்பது வாரம் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். புதியதாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், கட்டிய வீடு பாதியிலேயே நிற்கிறது, வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்க, இப்படி பூமி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் இந்த பரிகாரம் செய்வதன் மூலம் கைமேல் பலன் உண்டு.


மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ