வயது வந்த ஆணும், பெண்ணு திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ முழு சுதந்திரம் உள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் அரசு திருமனத்திர்க்கான வயது வரம்பை தெரிவித்திருந்தது. அதன்படி, இளைஞர்களுக்கு திருமண வயது 21-ஆகவும், பெண்களுக்கு திருமண வயதானது 18-ஆகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் மூலம் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை என்றாலும் ஓரளவு குறைய ஆரமித்தது. 


இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த நந்தகுமார் (வயது 20) என்ற வாலிபரும், துஷாரா (20) என்ற பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். பெண்ணிற்கு அறிவிக்கப்பட்ட திருமண வயதை கொண்டவர், ஆனால், அந்த பையனுக்கு திருமண வயது எட்டாதவர். 


இவர்களின் திருமணத்தை எதிர்த்து எண்ணின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த திருமணம் செல்லாது என்றும், துஷாரா தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, நந்தகுமார், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 


நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு மே மாதம் 7-ம் தேதி விசாரணைக்கு வந்ததுள்ளது.இந்நிலையில், வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது. திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது. 


இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு பெஞ்ச், “சமுதாயத்தின் மரபுசார்ந்த பிரிவினருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், எல்லையை கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம் வயது வந்த ஆணும், பெண்ணுக்குமான தடையற்ற உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது. வாலிபருடன் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது, வாலிபர் திருமண வயதை அடைந்த பின்னர் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் செய்யலாம்,” என கூறிஉள்ளது.