பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிவருவதாக ஜனாதிபதிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது..!


பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு எதிராக தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதுடன், தம்மை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்.


காங்கிரஸ் மட்டுமின்றி பிற கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் மிரட்டல் விடுக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி அவர் பேசி வருவது பிரதமர் பதவிக்கு ஏற்றதல்ல. ஆகையால் அவரை கண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.