காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் கோரி சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பிரிவினர் காவல்துறையின் தடுப்புகளை மீறி  இந்தியில் இருந்த சாஸ்திரி பவன் பெயர்ப் பலகையின் மீது கற்களையும், காலணிகளையும் வீசி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். 


இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களும் சாஸ்திரி பவன் வளாகத்தை நோக்கி முன்னேறி கேட்டுகள் மீது ஏறினர். இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது.


இதனைத் தொடர்ந்து மே 17 இயக்கத்தினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.