1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது......!


தமிழக அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் வெளியிடுகிறார்.


அதன்படி, 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடத் திட்டங்களும் கணினி மயமாக்கப்படும். 


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சுகின்ற அளவிற்கு புதிய பாடத்திட்டம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.