குணா: மத்திய பிரதேஷ மாநில பாஜக MLA, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தவிர்கள் பெண்கள் காதல் செய்வதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குணா அரசு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பிரதேஷ மாநில பாஜக MLA திரு. PL ஷகியா அவர்கள் கூறியதாவது... "பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தவிர்க்க பெண்கள் காதல் கொள்வது போன்ற விவகாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


மேலும் பெண்களை கவர்வதற்காக மேலை நாட்டு உக்திகளை கையாளும் இளைஞர்களும் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தொடரந்து பேசிய அவர் மகளிர் தின கொண்டாட்டம் என்பது மேலை நாட்டு கலாச்சாரம். நம் நாட்டின் 4 தினங்களில் மகளிரை போற்றும் தினங்களை கொண்டாடி வருகின்றோம். மேலை நாட்டில் ஒரு முறை மட்டுமே பெண்கள் தினத்தினை கொண்டாடுகின்றனர். அந்த வழக்கத்தினை நாம் கடை பிடிக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் கோலி அவர்கள் இத்தாலியில் திருமணம் செய்துக்கொண்ட போது, அவர் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகின்றார் என்னும் சர்ச்சைக்குறிய கருத்தினை வெளியிட்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.