இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இவர் மீது இவரது மனைவி பல பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அடுக்கினார். அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர். கடந்த சில வருடங்களாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், லண்டனை சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் மூலம் அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என கூறிய ஹசின் ஜகான், அதற்கான ஆதாரங்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 


இதை விசாரித்த பிசிசிஐ, ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, ஐபிஎல்., தொடரில் பங்கேற்க அனுமதி அளித்தது. 


இந்நிலையில் டேராடுனில் இருந்து இன்று டெல்லி திரும்பியபோது அவரது கார் ஒரு டிரக்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஷமி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் தலையில் தையல் போட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.