ஹாலிவுட்டின் பிரபலமான தொடரான ​​ஸ்பைடர் மேன் மற்றும் 127 ஹார்ஸ் போன்ற படங்களில் நடித்ததால் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ஜேம்ஸ் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போலி நடிப்புப் பள்ளியை நடத்தி வரும் போது ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை உருவாக்கியது மற்றும் இரண்டு நடிகைகளின் புகைப்படங்களை அவரது அனுமதி இன்றி எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


ஊடக அறிக்கையின்படி, லாஸ் ஏஞ்சல்ஸின் கோட்டி சுப்பீரியர் கோர்ட்டில் ஜேம்ஸ் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜேம்ஸ் பிராங்கோ நீண்ட காலமாக ஒரு போலி நடிப்புப் பள்ளியை நடத்தி வந்தார் எனவும், இதில் ஆடிஷன் என்ற பெயரில் பெண்களின் புகைப்படங்களை பெற்று, ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க பயன்படுத்தினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜேம்ஸ் பிராங்கோ தற்போது HBO-ன் தொலைக்காட்சி தொடரான ​​'தி டியூஸில்' பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில், ஜேம்ஸ் பிராங்கோவின் வழக்கறிஞர் தனது வாடிக்கையாளருக்கு உடல்நலக்குறைவு இருப்பதன் காரணமாக அவரை தண்டிக்க கூடாது என வழக்காடு மன்றத்தில் முறையிட்டுள்ளார். 


முன்னாதக நடிகைகள் சாரா டிதர்-கபிலன் மற்றும் டோனி சீக் ஆகியோர் 2014-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிராங்கோவின் பள்ளியில் அனுமதி பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு நடிகைகளும், ஜேம்ஸ் பிராங்கோ சிக்கியுள்ள குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டுள்ளனர்.


இது தவிர, சாரா டிதர்-கபிலன் மற்றும் டோனி சீக் ஆகியோர் ஜேம்ஸ் பிராங்கோவைப் பற்றி மேலும் பல விடயங்களை வெளியிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.