நடிகர் அஜித்தின் மகன் சஞ்சய் தற்போது முதன் முதலாக ஒரு தமிழ் படத்தை எழுதி இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தாயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு தேவையான ஒரு உதவியை நடிகர் அஜித்குமார் செய்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் மகன் இயக்கும் படம்..


தமிழ் ஸ்டார்களின் வாரிசுகள் திரையுலகிற்குள் அவர்களின் பெற்றோர்களை தொடர்ந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சையும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை லைகா நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த படத்தில், கவின் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுத குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முதல் படத்திலேயே பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம தயாரிப்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. 


சஞ்சய்க்கு அஜித்குமார் செய்த உதவி..


நடிகர் அஜித்குமார், எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்திருப்பதில்லை. இவர் சம்பந்தமான செய்திகளை, அவரது விளம்பர தூதரான (PRO) சுரேஷ் சந்திராதான் வெளியிட்டு வருகிறார். அஜித்திற்கு மட்டுமல்லாது, இன்னும் சில படங்களை விளம்பர படுத்துவதற்கும் சுரேஷ் சந்தரா PROவாக இருக்கிறார். 


லைகா நிறுவனம் தயாரிக்கும் சஞ்சயின் படத்திற்கு PROவாக சுரேஷ் சந்திராவை தேர்வு செய்திருக்கின்றனர், படக்குழுவினர். இது குறித்து முடிவெடுக்க தயங்கிய சுரேஷ், அஜித்திடம் சென்று பேசியுள்ளார். அதற்கு அஜித், தயங்காமல் இந்த வேலையை செய்யுங்கள் என்று கூறியுள்ளாராம். மேலும், தொலைபேசி மூலமாக விஜய்யின் மகனுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், “அஜித் நல்ல மனிஷன்பா..” என மெய் சிலிர்த்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறி வருகின்றனர். இது சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | Vijay: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்? காரணம் இதுதானா! அதிர்ச்சி தகவல்..


மகனை கண்டு கொள்ளாத விஜய்? 


நடிகர் விஜய், தற்போது தனது 68வது படமான ‘GOAT’ படத்தில் பிசியாக உள்ளார். இதில், அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் முதன் முதலாக சையின்ஸ் ஃபிக்ஷன் கதையில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் மகன் சினிமாவிற்கு வந்துள்ளதை தொடர்ந்து அவர் படத்தை எடுப்பதற்காக விஜய் ஒரு உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. சஞ்சயின் தாய் சங்கீதா உதவி செய்ததால்தான் லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. 


வெளிநாட்டில் படித்த சஞ்சய்..


விஜய்யின் மகன் சஞ்சய்க்கு 23 வயது ஆகின்றது. சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்ற இவர், பின்பு கனடா நாட்டின் டொரண்டோ நகரில் உள்ள ஒரு கல்லூரியில் திரைப்பட தயாரிப்பில் டிப்ளமோ முடித்துள்ளார். சில ஆண்டுக


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


ளுக்கு முன்பு சென்னைக்கு திரும்பிய இவருக்கு, இவரது முதல் படமே வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லைகா நிறுவனம், கமர்ஷியல் வகை கதைகளை தயாரித்து வழங்கி வருகிறது. அதனால், சஞ்சய் இயக்கும் படமும் கமர்ஷியல் கதையாக இருக்கும் என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். 


மேலும் படிக்க | வாய்ப்பு கேட்டவரை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்! என்ன செய்தார் தெரியுமா?