நடிகர் அஜித்குமார், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கிவரும் படத்தில் தற்போது பிசியாக நடித்துவருகிறார். இதை முடித்த பின்னர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித்தைப் பொறுத்தவரை சமூக வலைதளங்களில் அவருக்கு அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இல்லை. அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் வாயிலாகவே அஜித்தின் அறிக்கைகள் உள்ளிட்டவை பொதுமக்களை வந்தடையும்.


அதன்படி அஜித்தின் பெயரில் அவ்வப்போது அறிக்கைகள் உள்ளிட்டவை வெளியாகும். அந்த வகையில் தற்போது அஜித்தின் பெயரில் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


அவர் வெளியிட்டுள்ள கார்ட்டூனில், கழுதையை வைத்து வாழ்க்கைத் தத்துவம் சொல்லப்பட்டுள்ளது. ‘ஒருவர் எதைச் செய்தாலும் அதை இந்த உலகம் விமர்சித்துக்கொண்டேதான் இருக்கும்’ எனக் குறிப்பிடும் விதமாக அந்தக் கழுதை கார்ட்டூன் அமைந்துள்ளது.



மேலும் படிக்க | விக்ரம் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸா?!- மலைக்க வைக்கும் பட்டியல்!


கதையின் நீதியாக- ஒருவரால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது; நீங்கள் எதைச் செய்தாலும் அதில் குறைகூற சிலர் இருப்பார்கள். எனவே, உங்களுக்கு எது சரி என மனதுக்குப் படுகிறதோ அதைச் செய்யுங்கள் எனக் குறிப்பிடும் தொனியில் அந்தப் பதிவு அமைந்துள்ளது.


அஜித் இந்தப் பதிவை எதற்காக வெளியிட்டார், அதுவும் இந்தச் சமயத்தில் ஏன் வெளியிட்டார், யாரை மனதில் வைத்து இந்தப் பதிவு வெளியானது என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.


மேலும் படிக்க |  துப்பாக்கி சுடும் தளத்தில் நடிகர் அஜித்- வைரல் புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!