Actor Ajith Kumar Slaps Fan : காேலிவுட் திரையுலகில் அதிகளவு ரசிகர்களை கொண்ட பிரபலங்களுள் ஒருவர் அஜித்குமார். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகராக இருக்கும் இவர் இணை நடிகரான விஜய்க்கு போட்டியாக கருதப்பட்டார். தற்போது விஜய் அரசியலில் ஈடுபட உள்ளதால் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். இதனால், அஜித்தின் ராஜ்ஜியம்தான் என சொல்லப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. அது என்ன சம்பவம்? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகரை அடித்த அஜித்!!


நடிகர் அஜித், டாப் நடிகராக இருப்பினும் படப்பிடிப்பை தவிர பிற இடங்களில் கேமராக்களை தவிர்ப்பவர். அது மட்டுமன்றி, தன் பிரைவசிக்கு பிறர் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் நினைப்பார். அப்படி மீறுவோரை கண்டிக்கவும் செய்வார். இதனாலேயே இதுநாள் வரை எந்த சமூக வலைதள பக்கத்திலும் தனக்கென தனியாக கணக்கு ஏதும் தொடங்காமல் இருக்கிறார். தன் குடும்பத்துடன் எங்கேனும் வெளியில் சென்றால் கூட ரசிகர்களின் தொல்லை இருக்க கூடாது என்று கருதுவார். சொல்லப்போனால், அஜித்திற்கே அவரது ரசிகர்களை பிடிக்காது என்ற ஒரு கருத்தும் உலாவி வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு படப்பிடிப்பின் போது ரசிகர் ஒருவரை பளார் என்று கன்னத்தில் அறைந்திருக்கிறார் அஜித். 


மேலும் படிக்க | விடாமுயற்சி படம் தள்ளிப்போக காரணம் என்ன? அஜித்தால் கடுப்பான ரசிகர்கள்..


பிரபலம் சொன்ன தகவல்..


டிவி நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும், சில படங்களிலும் காமெடி நடிகையாக உலா வந்தவர் ஆர்த்தி. இவர், அஜித்துடன் இணைந்து 2006ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பதி’ படத்தில் நடித்தனர். இதில் அவர், நாயகி சதாவிற்கு தோழியாக நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை ஆர்த்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் ஷூட்டிங்கின் போது, அஜித் நடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் அஜித்தின் பெயரை தலையில் பச்ச்சை குத்திக்கொண்டு ‘தல தல’ என முழக்கமிட்டுக்கொண்டிருந்தாராம். 



இதை பார்த்த அஜித், அவரை அருகில் அழைத்து கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அதன் பிறகு, அவரது கையில் பணம் கொடுத்து பின்பு மொட்டை அடிக்கவும் சொல்லியிருக்கிறார். அவர் மொட்டையடித்து வந்த பின்பு, இனி இவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை கூறிய அஜித், அன்பு மனதில் இருந்தால் போதும் என்றும் கூறி இருக்கிறார். ஆர்த்தி, அஜித் குறித்து பேசிய இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.


ரொம்ப கோபக்காரர்தான் போல..!


நடிகர் அஜித், தன்னையும் தன் குடும்பத்தையும் மீடியாவிற்கு இரையாக தூக்கிப்போடாத நடிகர்களுள் ஒருவர். ஒரு முறை, அவர் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த போது ஒரு ரசிகர் அவரை வீடியோ எடுத்துவிட்டார். அப்போது அஜித்தின் மகள் அனெளஷ்காவும் அருகில் இருந்தார். இதனால், கடுப்பான அஜித் அந்த ரசிகரின் போனை வாங்கி அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு மீண்டும் திருப்பி கொடுத்தார். அதே போல 2021ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஒரு ரசிகர் அவர் அருகே வந்து செல்ஃபி எடுத்தார். அப்போது கடுப்பான அஜித், அவரது போனை பிடுங்கி வைத்துக்காெண்டார். பின்பு சிறிது நேரம் கழித்து அதை திருப்பி கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், “பெரிய கோபக்காரர்தான் போல” என்று கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | Ajith Kumar: ரசிகரின் போனை வாங்கி தன் வீடியோவை டெலிட் செய்த அஜித்! வைரலாகும் வீடியோ…


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ