பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகன், பரத் கல்யாண். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தொடர்ந்து  நடித்து வருகிறார்.  கன்னடத் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் சிருங்காரம் என்னும் படத்தில் அறிமுகமானார். பின்னர் யக்கா,பயணம், கோடிகோப்பா 2, மற்றும் பகவத் ஸ்ரீ ராமானுஜாபோன்ற கன்னடப் படங்களில் நடித்தார். மேலும் தமிழிலும் தனுஷ் நடித்த சுள்ளான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இவர் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் மருத்துவமனை ஓனராக நடித்து வருகிறார். இவருக்கு ப்ரியா என்ற மனைவி இருந்தார். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் HRஆக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குடும்பத்தோடு விருகம்பாக்கத்தில் வசித்துவந்தனர்.



இந்தச் சூழலில் ப்ரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இன்று அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.



ப்ரியா உயிரிழந்ததற்கு காரணம் அவர் பேலியோ டயட்டில் இருந்ததாகவும், அதன் காரணமாக அவருக்கு டயாபடிக் அதிகமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பேலியோ டயட் இருந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் மனைவியை இழந்து வாடும் பரத் கல்யாணுக்கு சின்னத்திரை நடிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | திகட்ட திகட்ட காதலிப்போம் - மீண்டும் நா. முத்துக்குமார்... பாடலாகின கவிதை வரிகள்


மேலும் படிக்க | வாரிசு படத்தால் சிக்கித்தவிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ