புதுடெல்லி: நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுடன் போராடிக் கொண்டிருந்த நடிகர் இர்பான் கான் மும்பையில் புதன்கிழமை காலமானார். பெருங்குடல் தொற்று காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 53.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.


கடந்த வாரம் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். லாக்டவுன் காரணமாக தாயின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இர்ஃபான் கான். இர்ஃபான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அடிக்கடி வெளிநாடு சென்று வருகிறார். 54 வயதான நடிகர் இர்ஃபான் கான் கடந்த ஓராண்டாக திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இர்ஃபான் நடித்த 'அங்க்ரேஸி மீடியம்' திரைப்படம் வெளியானது. ஊரடங்குக்கு முன் கடைசியாக வெளியான இப்படம் ஒரு நாள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் அந்தப் படம் ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்பட்டது.