கயல் படம் மூலம் நடிகராக அறிமுகமான சந்திரன், தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் ‘கயல்’.இதில் சந்திரன் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் கயல் சந்திரன் என்று பலராலும் அவர் அழைக்கப்பட்டு வந்தார்.


இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய உண்மை பெயரான சந்திரமௌலி என்று அழைக்க வேண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்,


எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது.


இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, அனைவரும் “சந்திரன்” என்ற என் பெயரை இனி “சந்திரமௌலி” என்று அழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’.


 



 



இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.