ரஜினிகாந்த் (Rajinikanth) மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Corona Spread) அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth). மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் வாங்கியுள்ளார். 


ALSO READ | கொரோனா நிவாரண நிதி: நடிகர் ரஜினிகாந்த் ரு.50 லட்சம் வழங்கினார்


இந்நிலையில் அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக அமெரிக்காவில் இரண்டாவது முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி கடந்த 2019-ஆம் அந்த சமயத்தில் அரசியல் அறிவிப்பு காத்திருந்ததால் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல முடியவில்லை. 


அதேபோல் கடந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகமானதால் பயணத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக வரும் 19ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.


ALSO READ | மக்கள் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்யுங்கள்: ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR