நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தன்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் செய்தி வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதைக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் கூறியதாவது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. நான் ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் நன்றாக இருக்கிறேன் என எனது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வுக்கு வந்துள்ளேன். மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன். குட் பாய் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.