'கேஜிஎஃப்' மற்றும் 'கேஜிஎஃப்-2' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் நடிகர் யாஷ் பான் இந்திய நடிகராக உயர்ந்து செல்வாக்குடன் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.  இந்த படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல பாராட்டுக்களும் குவிந்து, படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை செய்து சாதனை படைத்தது.  'கேஜிஎஃப்' படத்தின் முதல் பாகத்தை காட்டிலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் பெரியளவில் வசூலையும் வரவேற்பையும் பெற்றிருந்தது.  'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாதியில் நடிகர் யாஷ் இறந்து கடலுக்குள் விழுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.  ராக்கி பாய் இறந்துவிட்டால் கதை விறுவிறுப்பாக இருக்காது, அடுத்த பகுதியில் அவர் உயித்தெழுந்து வருவது போல காண்பிப்பார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.  மேலும் ரசிகர்கள் பலரும் 'கேஜிஎஃப்' படத்தின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'சூர்யா 42' படத்தின் தலைப்பு இதுதானா? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!


அதாவது 'கேஜிஎஃப்' படத்தின் மூன்றாம் பாகத்திலும் யாஷ் தான் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு பதிலாக வேறு நடிகர் இடம்பெயரலாம் என கூறப்படுகிறது.  தற்போது 'கேஜிஎஃப்-3' படம் குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, 'கேஜிஎஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தின் பணிகள் 2025-ம் ஆண்டில் தான் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏனெனில் தற்போது 'கேஜிஎஃப்' பட இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து 'சலார்' படத்தை இயக்கி வருகிறார்.  சலார் படத்தின் பணிகள் கிட்டதட்ட செப்டெம்பர் மாதம் வரையிலும் நீடிக்கும் என்பதால் இப்போது இயக்குனர் படுபிஸியாக இருக்கிறார்.  2025ம் ஆண்டில் 'கேஜிஎஃப்' படத்தின் மூன்றாம் பாகத்தின் பணிகள் தொடங்கப்பட்டு 2026ம் ஆண்டில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.



மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில், ஜேம்ஸ்பாண்ட் தொடரை போன்று 'கேஜிஎஃப்' படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  அதாவது ஐந்து தொடர்கள் வரை யாஷ் நடிப்பார் என்றும் அதற்கு பிறகு ஜேம்ஸ்பாண்ட் தொடரில் போன்று அடுத்தடுத்த பாதியில் புதிய நடிகர்கள் தோன்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.  ஆனால் இந்த தகவல் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ராக்கி பாய் என்றாலே யாஷ் தான் நினைவுக்கு வரும் நிலையில் அவரது இடத்தில வேறொரு நடிகரை வைத்து பார்க்கமுடியாது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  தற்போது நடிகர் யாஷ் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்காலிகமாக 'யாஷ் 19' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் சுமார் ரூ.400 கோடி அளவில் தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.  மேலும் இதுவரை இந்திய சினிமாக்களில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் இந்த படமும் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | துணிவு அப்டேட்; பெரிய அளவுக்கெல்லாம் எதிர்பார்க்காதீங்க...ஹெச். வினோத் நச் பதில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ