கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.பான் இந்தியா படமாக வெளியான இப்படத்துக்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்தது. படத்தின் மேக்கிங், சண்டை காட்சிகள், பாடல்கள் என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி பக்கா பேக்கேஜாக ரசிகர்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருக்கிறது. இதனால் யாஷ் வியாபாரத்தில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார். இரண்டாம் பாகத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கேஜிஎஃப் 3க்கு ஆவலோடு காத்திருக்கின்றனர்.



இதற்கிடையே மூன்றாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக கேஜிஎஃப் தயாரிப்பாளர் சமீபத்தில் கூறியிருந்தார். இரண்டாம் பாகத்தின் தாக்கம் இன்னும் விலகாத சூழலில் மூன்றாம் பாகத்திற்கான அப்டேட்டும் உடனே வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


மேலும் படிக்க | தெலுங்கில் ஹிட்களை கொடுத்த பல்லாவரம் யசோதா - சமந்தாவின் சுவாரஸ்ய பின்னணி


இந்நிலையில் கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்து நடிகர் யாஷ் பேசியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் தொடர்பாக நானும், பிரசாந் நீலும் நிறைய காட்சிகளை யோசித்துள்ளோம். 



இரண்டாம் அத்தியாயத்தில் எங்களால் செய்ய முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன. எனவே மூன்றாம் அத்தியாயத்துக்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும்” என கூறியுள்ளார்.


மேலும் படிக்க | OTTயில் வெளியாகும் பொன்னியின் செல்வன்! - எத்தனை கோடி பிசினஸ் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR